*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 26, 2014

திலீபன் தினம் 2014...

வறுமையில் சாகவில்லை
வாடவைத்து
வஞ்சத்தில் சாகடித்தது.

வயிற்றில் பசி அல்ல
மனதில் விடுதலைப் பசி.

விழுந்தாலும் முளைப்பேனென
யாசகம் கேட்டிருந்தவன்
தலையில்....
ஏன் நம் தலையிலும்
இடி வீழ்த்தியது
காந்தி தேசம்.

இருக்கட்டும்
இருக்கட்டும்

கற்பனையில் வாழும்
குழந்தைகளாக
மணல் வீடு கட்டி அழித்த
அண்ணா அக்காக்களாக
இருந்துவிட்டு
அப்படியே சாவோம்.

மகிழ்ச்சிதானே
இப்போ ?!!!

குழந்தைநிலா ஹேமா !

2 comments:

Thenammai Lakshmanan said...

மணல்வீடு கட்டி அழித்த அண்ணா அக்காகளாக.. ஹ்ம்ம் வலித்த கவிதை ஹேமா.

'பரிவை' சே.குமார் said...

வலி நிறைந்த கவிதை சகோதரி.

Post a Comment