*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 13, 2014

தோலும் தோல்வியும்...

காமம் உரச
தீரா இரவு வலிதர
நீந்திக்கொண்டிருகிறது
உடல் நெளிய
மீன் குஞ்சொன்று.

தீர்மானமற்ற காதல்
காமத்தின் முடியாமை
ஒத்திய காயங்களுக்கு
விதியின் அகோர வெக்கை
மருந்திட முடியாப் பெண்மை.

ஆதுரமாய்
முத்தமிடுகிறது
அந்த மீன்குஞ்சு
முன்னொருநாள்போல்
பாதிப் பௌர்ணமி
அதிசயிக்க.

மனதையும் உடம்பையும்
இறுக்கி
சுற்றிப்படர்கிறது பசலை.

ஆனாலும் வேண்டாம்
ஒலிப்பதிவில் முனகி ஒலிக்கும்
காமம் விற்கும் ஒருத்தியென
ஒரு காதல் அசிங்கம்.

மேசை மெழுதிரியும்
அர்த்தமில்லாக் கவிதைகளுக்குள்
சிக்காத சில வார்த்தைகளும்
அழுகி நாறும் பூவிதழ்களும்
போதுமெனக்கு!!!

குழந்தைநிலா ஹேமா !

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான வரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment